கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் பள்ளியில் பழுதான கட்டிடம் இடிப்பு

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் தினகரன் செய்தி எதிரொலியால் இடித்து அகற்றப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்து மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டனர்.

தற்சமயம் பள்ளிக்கு இரண்டாம் பருவ விடுமுறை விடப்பட்ட நிலையைப் பயன்படுத்தி கொண்டு பழுதடைந்த கட்டிடத்தை பொக்லைன் இயந்திரம் வைத்து உடனே இடித்தனர். பழுதடைந்த கட்டிடத்தை இடிப்பதை கண்ட இப்பகுதியை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு மற்றும் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: