கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் தினகரன் செய்தி எதிரொலியால் இடித்து அகற்றப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்து மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த டிசம்பர் மாதம் 23ம் தேதி செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டனர்.