வைணவ பிரபந்த பாடசாலையில் அனைத்து பிரிவினருக்கும் நாலாயிரப் பிரபந்தம் கற்று அறியும் பயிற்சிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

செங்கல்பட்டு: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நெம்மேலி அருள்மிகு ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் வைணவ பிரபந்த பாடசாலையில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த அறக்கட்டளை நிர்வாகத்தின் மூலம் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லாமல் பயிற்சி வழங்கப்படும். ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ. 3000/- வழங்கப்படும்.

வைணவ பிரபந்த பயிற்சி பள்ளியில் சேர வயது வரம்பு 14 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி காலம் 2 ஆண்டுகள் தங்கி பயிற்சி பெற வேண்டும். சேர்க்கை படிவங்கள் அறக்கட்டளை அலுவலகத்தில் அலுவலக நேரத்திலும், இந்து சமய அறநிலைத்துறையின் hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 25.01.2022. இந்த நாலாயிரப்பிரபந்தம் கற்கும் பயிற்சியில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணபித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Stories: