மதுரை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளித்து இலங்கை அரசு மனித உரிமை மீறலை அரங்கேற்றியுள்ளது என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.