மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் எலுமிச்சை மற்றும் மாதுளை செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் துவங்கி உள்ளதாக தோட்டக்கலை துணை இயக்குனர் (பொ) இளவரசன் தெரிவித் துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், நடப்பாண்டு திருவாரூர் மாவட்டத்தில்ஒருங் கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் 2021-22 திட்டத்தின்படி எழுமிச் சை 30 ஹெக்டர் மற்றும் மாதுளை செடிகள் 9 ஹெக்டர் அளவிற்கு விநியோ கிக்கும் விதமாக மூவாநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி செய்யப் பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது.