ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே மயானத்திற்கு பாதை வசதி இல்லாததால் கிராமமக்கள், இறந்தவர்களின் உடல்களை ஓடை தண்ணீரில் இறங்கி கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது.ராஜபாளையம் அருகேயுள்ளது இளந்திரை கொண்டான் கிராமம். இங்கு 1200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மயானத்திற்கு செல்ல நீர் ஓடும் ஓடையை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. மழைக்காலங்களில் இந்த ஓடையில் தண்ணீர் அதிகம் செல்வதால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதற்கு இப்பகுதி மககள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.