மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா இரண்டாவது வாரமாக பேருந்து மூலமும், நடந்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கீழநாஞ்சில் நாடு பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு அவர் அரசு பேருந்தில் மகளிருக்கான கட்டணமில்லா பயண திட்டத்தின் மூலமாக பயணித்தார். பேருந்தில் நின்று கொண்டே பயணம் செய்த அவர், கீழவீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு நடந்து சென்றார்.