புதுடெல்லி: ஏர் இந்தியாவை டாடா குழுமம் கையகப்படுத்துவதற்கான செயல்முறைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை விற்பனை செய்வதற்கு ஒன்றிய அரசு முயற்சித்து வந்தது. இதற்காக கடந்த அக்டோபரில் நடந்த ஏலத்தில் ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் ரூ.18ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது. டிசம்பர் மாத இறுதிக்குள் விற்பனைக்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவடையும் என்று ஒன்றிய அரசு கூறியிருந்தது. ஏர் இந்தியாவின் ரூ.15ஆயிரத்து 300கோடி கடனை டாடா நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது போக மீதி தொகையான ரூ.2700கோடியை ரொக்கமாக டிசம்பர் மாத இறுதிக்குள் ஒன்றிய அரசிடம் டாடா நிறுவனம் வழங்குவதாக கூறியிருந்தது.