லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில், ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு’ (டிஆர்டிஓ) சார்பில், பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் சோதனை மையம் மற்றும் பிரமோஸ் ஏவுகணை உற்பத்தி மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றனர். விழாவில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்தியா தயாரிக்கும் அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லும் பிரமோஸ் ஏவுகணை, பிற ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை வேறு எந்த நாட்டையும் தாக்குவதற்காக அல்ல. பிற நாட்டை தாக்குவதோ, பிற நாட்டின் நிலங்களை அபகரிப்பதோ இந்தியாவின் குணாதிசயம் கிடையாது.