கோபி: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வன பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு வந்த வேளையில்,பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளையினர் அத்தி மரம், வேங்கை மரம், ஈட்டி மரம், கான்ட்ரிக் மரம், ஆலமரம், இலைப்பொருசு மரம், ஆச்சை போன்ற மரங்களின் விதைகளை ஒத்தகுதிரையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கினர்.அதைத்தொடர்ந்து மாணவிகள் குழுவாக இணைந்து 5 மணி நேரத்தில் 20 ஆயிரம் விதை பந்துகளை தயார் செய்தனர்.