புதுடெல்லி: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் 97வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ‘வாஜ்பாயின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வோம். தேசத்திற்காக அவர் ஆற்றியுள்ள செழுமையான சேவைகளால் நாம் உத்வேகம் பெற்றுள்ளோம். இந்தியாவை வலுவாக்கவும், வளர்ச்சியடைய வைக்கவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.