28, 29ம் தேதிகளில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: ஆதிதிராவிடர் நலத்துறை அறிவிப்பு

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு 28, 29ம் தேதிகளில் இணையம் வாயிலாக பொதுமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை வெளியிட்ட அறிவிப்பு: 2021-22ம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் / நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர்/ உடற்கல்வி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு 28.12.2021 அன்று நடக்கிறது. பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர் / இடைநிலை ஆசிரியர், ஆகிய  பதவிகளுக்கு மாவட்டத்திற்குள்ளும் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் 29.12.2021 அன்றும் காலை 10 மணி அளவில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பொது மாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் பணியிட மாறுதல் கோரி பதிவு செய்து விண்ணப்பித்தவர்கள் மட்டும் ஆன்லைன் கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: