ரானனா: உலகிலேயே முதல் நாடாக பெருவாரியான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு சாதித்த இஸ்ரேலில் இன்னும் கட்டுப்பாடுகள் தொடர்வதை எதிர்த்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஒமிக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக இஸ்ரேலில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை கண்டித்து ரானனா நகரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் இறங்கினர். பெரும்பாலானோர் இரு தவணை தடுப்பூசி போட்டு மந்தை நோய் எதிர்ப்பு சக்தி நிலையை அடைந்த பிறகு, அரசு அறிவுறுத்தியபடி தற்போது பாதிக்கும் மேற்பட்டோர் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டும் கூட கட்டுப்பாடுகள் இன்னும் தொடர்வது ஏன் என்பது அவர்களின் கேள்வி.