வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது சோலையார் எஸ்டேட். இங்குள்ள தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வருபவர் ஆனந்தராஜ். இவரது மகன் ராகுல் (16). அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் அருகே ஏதோ சத்தம் கேட்டது. ஊருக்குள் யானை புகுந்திருக்கலாம் என்று எண்ணி ராகுல் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது, இருட்டில் மறைந்திருந்த கரடி ஒன்று, ராகுலை தாக்கி கவ்வி இழுத்துச்சென்றது. அவர் அலறியபடி கூச்சல் போட்டார்.