வெல்வா: 26வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் வெல்வா நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆடவர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் 12ம் நிலை வீரரான 28 வயதான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் சக நாட்டைச் சேர்ந்த 20 வயதான லக்ஷயா சென்னுடன் மோதினார். இதில் முதல் செட்டை லக்ஷயா சென் 22-17 என கைப்பற்றினார். ஆனால் அடுத்த 2 செட்டிலும் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய கிடாம்பி ஸ்ரீகாந்த், 21-14, 21-17 என தன்வசப்படுத்தி வெற்றிபெற்றார். இந்த வெற்றி மூலம் உலக சாம்பியன் ஷிப் தொடரில் பைனலுக்குள் நுழைந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அரையிறுதியில் தோல்வியடைந்த லக்ஷயா சென்னுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.