சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல்லில் அரசு உதவி பெறும் பள்ளியில் சேதமடைந்த கட்டிடத்தில் மாணவர்கள் அமர வைக்கப்பட்டிருந்ததால், அப்பள்ளி கட்டிடம் சீல் வைக்கப்பட்டது. திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பள்ளிச்சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியானர். இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிக்கட்டிடங்கள் தரம் குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் சிவகாசி அருகே திருத்தங்கல் எம்.ஜி.ஆர் காலனியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், தாசில்தார் ராஜகுமார் நேற்று ஆய்வு நடத்தினர்.