விருதுநகர்: கர்ப்பமாக உள்ள வளர்ப்பு நாய்க்கு விருதுநகரில் கோலாகலமாக வளைகாப்பு நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு கமகமக்கும் கறி பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. திருநெல்வேலியை சேர்ந்தவர் அருள் அரசு. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் இரு ஆண், ஒரு பெண் நாய்கள் உள்ளன. பெண் நாய்க்கு ‘திரிஷா’ என பெயரிட்டுள்ளார். இந்த நாய் தற்போது கர்ப்பமாக உள்ளது. தொழில் விஷயமாக விருதுநகர் வந்த இடத்தில் தன்னுடன் வந்த நாய்க்கு, இங்குள்ள தனது கெஸ்ட் ஹவுசில் நேற்று வளைகாப்பு நடத்தி அசத்தினார். அருள் அரசு கூறுகையில், `என்னிடம் உள்ள நாய்களில் திரிஷா மிகவும் புத்திசாலி.