மகாராஷ்டிராவைப் போன்று தமிழ்நாட்டிலும் ஆளுநர் தன்னிச்சையாக துணை வேந்தர் நியமிப்பதை தடுக்க சட்டம்: ஜவாஹிருல்லா அறிக்கை

சென்னை: மகாராஷ்டிராவைப் போன்று தமிழ்நாட்டிலும் ஆளுநர் தன்னிச்சையாக துணை வேந்தர் நியமிப்பதை தடுக்க மாநில அரசு சட்டம் இயற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா அறிக்கை அளித்தார். மராட்டியத்தில் பல்கலை. துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் தலையீடு அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். துணை வேந்தர்களை மாநில அரசே தேர்வு செய்து பரிந்துரைக்கும் வகையில் பொது பல்கலை. சட்டம் 2016-ல் திருத்தம் செய்ய முடிவு செய்திருந்தது என கூறினார்.

Related Stories: