அவனியாபுரம்: அவனியாபுரம் வெள்ளக்கல் பாசன கால்வாயில் வெண் பஞ்சு போல நுரை மிதப்பதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வெள்ளக்கல் பாசன கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் கழிவுநீர் கலந்து பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை, நுரையாக வந்து கலக்கிறது. இதனால், விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.