விருத்தாசலம்: தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசனின் மனைவி பவானி (55). இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அமைச்சர் சி.வெ.கணேசன் தனது குடும்பத்தினருடன் விருத்தாசலத்தில் உள்ள தில்லை நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை அவரது மனைவி பவானி மாரடைப்பால் காலமானார். அவரது இல்லத்தில் பவானி அம்மாள் உடலுக்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர்கள் முத்துசாமி, மா.சுப்பிரமணியன், மஸ்தான், கயல்விழி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுபா இளவரசன், எம்எல்ஏக்கள் ராதாகிருஷ்ணன், சபா ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி, கலெக்டர் பாலசுப்ரமணியம், எஸ்பி சக்திகணேசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.