தமிழகம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸின் 4 மனுக்கள் தள்ளுபடி: வழக்கு விசாரணையை வரும் 10 ம் தேதிக்கு ஒத்திவைத்தது விழுப்புரம் நீதிமன்றம்!!! Dec 07, 2021 டிஜிபி ராஜேஸ்தாஸ் விழுப்புரம் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் மீதும், அவருக்கு உதவியதாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் மீதும் தொடரப்பட்ட வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டபட்ட 2 பேரும் ஆஜர் ஆகவில்லை. அப்போது இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருப்பதால் அதுவரை விசாரணையை தொடரகூடாது என ராஜேஸ்தாஸ் தாக்கல் செய்த மனுவை நீதிபதி நிராகரித்தார். மேலும் இந்த வழக்கின் முதல் 3 சாட்சிகளை தாங்கள் குறுக்கு விசாரணை செய்த பின்னரே மற்ற சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்ற 3 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி கோபிநாதன் அன்றைய தினமே சாட்சிகளை குறுக்கு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.
கடந்த 10 ஆண்டுகாலமாக மாநில உரிமைகளை பறித்த, மக்கள் விரோத பாஜக ஆட்சியை விரட்டிடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடந்த 10 ஆண்டுகாலமாக மாநில உரிமைகளை பறித்த, மக்கள் விரோத பாஜக ஆட்சியை விரட்டிடுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சட்டம் – ஒழுங்கு பிரச்னையால் மூடப்பட்ட திரெளபதி அம்மன் கோயிலை தினசரி பூஜைகளுக்காக திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி!!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழாவிற்காக தயாராகும் பந்தல்: தக்கார், அறங்காவலர்கள் தலைமையில் ஏற்பாடு
கொடைக்கானல் மஞ்சூர், பெருமாள்மலை பகுதிகளில் கட்டுக்குள் வர மறுக்கும் காட்டுத்தீ: பல ஏக்கர் மரங்கள், செடிகள் நாசம்
நீலகிரியில் ஒரே நாளில் ரூ.21.11 லட்சம் பறிமுதல்: உரிய ஆவணம் இன்றி தொகையை எடுத்து செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்
இயற்கையை பாதுகாத்து ஆற்றலை சேமித்து மாசற்ற உலகை உருவாக்க மறுசுழற்சி மிகவும் அவசியம் : சொல்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் ஆத்தூர் புதிய ஆற்றுப் பாலத்தில் ஆபத்தை உணராமல் கடக்கும் வாகனங்கள்