பொன்னமராவதி அருகே சாலை விபத்தில் கணவனை இழந்த பெண்ணுக்கு நிவாரணம் கிடைக்காமல் அவதி-4 குழந்தைகளுடன் வாழ்க்கை போராட்டம்

பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே சாலை விபத்தில் இறந்த கணவருக்கு உரிய நிவாரணம் கிடைக்காமல் 4 குழந்தைகளுடன் போராட்டத்துடன் வாழ்க்கை நடத்தி வரும் பெண்ணுக்கு அரசு உதவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மரவாமதுரை ஊராட்சி உடையம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (37). இவர் குடும்பத்துடன் தனது மாமனார் ஊரான கொன்னையம்பட்டி பாறைக்களத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார்.

கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு சாலை விபத்தில் இறந்து விட்டார். இவரது மனைவி போதும்பொண்ணு(43) தனது கணவர் இறந்த பின்னர் தனது குழந்தைகளான இந்துராணி, விமலா, ரூபா, மோகன் ஆகிய 4 குழந்தைகளுடன் அதே வீட்டில் சிரமமான சூழ்நிலையில் வசித்து வருகின்றார். அங்குள்ள அரசுப் பள்ளியில் குழந்தைகள் முறையே 9ம்வகுப்பு, 7ம்வகுப்பு, 6ம்வகுப்பு, 4ம்வகுப்பு படிக்கின்றனர்.

4 குழந்தைகளுடன் சிரமப்பட்டு வாழ்க்கை நடத்தி வரும் போதும்பொண்ணு தமிழக அரசு தனக்கு இருக்க வீடும், ஏதாவது வேலை மற்றும் உதவிகள் வழங்கினால் உதவியாக இருக்கும் என கண்ணீர் மல்க கூறினார் போதும்பொண்ணு. எனவே இவருக்கு அரசு நிவாரணம் மற்றும் வேலை வழங்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: