மதுரை: மதுரை மாவட்டத்தில் தொடர் மழையால் பூக்கள் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. விளைநிலங்களில் செடியில் இருந்து பூக்கள் உதிர்ந்து வருகின்றன. தண்ணீர் தேங்கிய நிலங்களில் பூச்செடிகள் அழுகுகின்றன. இதனால், மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகத்திற்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து வரும் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. அதே நேரம் சபரிமலை சீசன் தற்போது துவங்கியுள்ளதால், பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.