அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் மழையால் முருங்கை மரங்களில் பூக்கள் உதிர்ந்தது

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் தொடர் கனமழையின் காரணமாக முருங்கை மரங்களில் பூக்கள் உதிர்ந்து போயுள்ளன. இதனால் அடுத்த சீசனுக்கு முருங்கை பயிரிட்டுள்ள விவசாயிகள் முருங்கை காய் அறுவடை செய்ய இயலாமல் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் ஈசநத்தம், ஆலமரத்துப்பட்டி, சாந்தப்பாடி, கோவிலூர், நாகம் பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்படுகின்றது. இப்பகுதி முருங்கை காய்திரட்சியாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் தமிழகத்து மாவட்டத்தில் மட்டுமல்லாமல், அன்மை மாநிலங்களிலும் அரவக்குறிச்சி பகுதி முருங்கை காய்க்கு தனி மவுசு உள்ளது.

ஆகையால் மலைக்கோவிலூர், ஈசநத்தம், இந்திரா நகர், பள்ளபட்டி, பழனி சாலை உள்ளிட்ட மொத்த கொள்முதல் மையங்களிலிருந்து, முருங்கை மொத்த வியாபாரிகள் வாங்கி மற்ற இடங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இந்நிலையில் அரவக்குறிச்சி ஒன்றிய பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர் கன மழையின் காரணமாக முருங்கை மரங்களில் பூக்கள் உதிர்ந்து போயுள்ளன. இதனால் அடுத்த சீசனுக்கு முருங்கை பயிரிட்டுள்ள விவசாயிகள் முருங்கை காய் அறுவடை செய்ய இயலாமல் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது.

இதன் காரணமாக முருங்கை விவசாயிகளுக்கு பணப் பயனில்லாத சிரமமான சூல்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஓரளவு முருங்கை காய்த்து இருந்த தோட்டத்து மரங்களிலும் தொடர் கன மழையின் காரணமாக காய்கள் அழுகி விற்பனைக்கு கொண்டு போக முடியால் வீணாகியுள்ளது. இதனால் அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை விற்பனைக்கு வரத்து அரவே வராமல் உள்ளது.

Related Stories: