திருப்போரூர், டிச.6: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய செம்பாக்கம் ஊராட்சியில் அச்சரவாக்கம் கிராமம் உள்ளது. இங்கு 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலானோர், விவசாயக்கூலிகளாக மிகவும் வறிய நிலையில் உள்ளனர். அச்சரவாக்கம் கிராமத்தில் அரசு மேயக்கால் புறம்போக்கு நிலத்தை சீர் செய்து விவசாயம் செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நிலங்களை அரசு கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது. அண்மையில் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த நிலத்தை ஆய்வு மற்றும் அளவீடு செய்தனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்து வரும் 200க்கும் மேற்பட்டோர் நேற்று செம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.