வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வு செய்த எம்எல்ஏ செந்தில்குமார் தெரிவித்தார். வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 700 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் வகுப்பறை கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதாலும், கணினி மையம் உட்பட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் கட்டிடத்திற்குள் இறங்குவதாலும் மாணவர்கள் படிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், இப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் பெண்கள் உயர்நிலைப்பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றி, அங்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.