சென்னை: தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: ஆந்திர முன்னாள் முதல்வரும், தமிழகம் மற்றும் கர்நாடக முன்னாள் ஆளுநருமான ரோசய்யாவின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
ஆந்திர மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையை 6 முறை தாக்கல் செய்து, தனது திறமையால் அனைவராலும் அறியப்பட்டவர். அடக்கமானவராகவும், பக்திமானாகவும் விளங்கியவர். அவரின் இழப்பு ஆந்திராவுக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் பேரிழப்பாகும். அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.