சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெறுவதையொட்டி இரண்டு நாட்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் இன்று கூட்டாக தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமனிடம் விருப்பமனு அளித்தனர்.