முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: ஒன்றிய அரசு மீண்டும் திட்டவட்டம்

டெல்லி: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று ஒன்றிய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. புதிய அணை கட்டுவதோ பழைய அணையை இடிப்பதோ அணையின் உரிமையாளரான மாநில அரசின் முடிவு என்று தெரிவித்துள்ளது. முல்லை பெரியாறு அணையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கை அனைத்தையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. அணையின் பாதுகாப்பு குறித்து ஏற்கனவே பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்துள்ளன. உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட அதிகாரம் அளிக்கப்பட குழுவும் அணை பலமாக உள்ளதாக அறிக்கை அளித்துள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று ஒன்றிய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள முல்லை பெரியாறு அணை என்பது மிகவும் உறுதியாக இருக்கிறது. பாதுகாப்பாக இருக்கிறது எனவே அந்த அணையை உடைக்கும் திட்டம் இல்லை என்று ஒன்றிய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. கேரளாவை சேர்ந்த எம்.பி.களான கிபிகிடன் மற்றும் ஆண்ட்ரோ ஆண்டனி கேள்விக்கு பதிலளித்துள்ள மத்தியுஞ் நீர்வளத்துறை இணையமைச்சர் இந்த பதிலை எழுத்துபூர்வமாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள முல்லை பெரியாறு அணையானது உறுதியாக இல்லை, பாதுக்காப்பாக இல்லை எப்போது வேண்டுமானாலும் உடைந்துவிடலாம், எனவே அந்த அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்டவேண்டும் என்பது கேரள அரசின் முடிவாக உள்ளது. ஆனால் இதனை எதிர்த்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஒன்றிய நீர்வளத்துறை ஆணையம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அந்த அடிப்படையில் வைத்து பார்க்கும் போது முல்லை பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது கேரள எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஒன்றிய நீர்வளத்துறை இணையமைச்சர் பதில் அளித்துள்ளார். நீரியல் அடிப்படையில், கட்டுமான அடிப்படையில், புவி அதிர்வு அடிப்படையில் அணை பலமாகவே உள்ளது.

Related Stories: