சென்னை: பிசி, எம்பிசி, சீர்மரபின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களில் வருமான உச்ச வரம்பை ரூ.2.50 லட்சம் ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அரசாணை: மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது போல, பள்ளிப்படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சம் ஆக உயர்த்தி வழங்கலாம்.