பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால், ஆண்டு சராசரி மழை அளவான 861 மிமீ காட்டிலும் அதிகமாக 1289.27மிமீ மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 73 ஏரிகளில் நேற்று வரை 65 ஏரிகள் நிரம்பியுள்ளன. இதில் மாவட்டத்தின் மேற்கே பச்சை மலை அடிவாரத்தில் களரம்பட்டி, அம்மாப்பாளையம் ஆகிய 2 கிராம பொதுமக்கள், விவசாயிகள் பயனடையக்கூடிய களரம்பட்டி பெரிய ஏரி நேற்றுமுன்தினம் இரவு 12.30 மணிக்கு தனது முழு கொள்ளளவை எட்டியதால், தண்ணீர் நிரம்பி வழிய தொடங்கியது.