நெல்லை: அம்பை ஊர்க்காடு தாமிரபரணி ஆற்றங்கரை அருகே இறந்த நிலையில் பெண் சிறுத்தை ஒதுங்கி கிடந்தது. வனத்துறையினர் இதனை கைப்பற்றி வசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பாபநாசம், மணிமுத்தாறு மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இந்நிலையில் பெருவெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பெண் சிறுத்தை இறந்த நிலையில், அம்பை ஊர்க்காடு அருகே கரை ஒதுங்கி கிடந்தது.