பொதுமக்கள் சாலை மறியல்

திருக்கழுக்குன்றம் நவ. 30: திருக்கழுக்குன்றம் அடுத்த சூராடிமங்கலம் கிராமத்தை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் நேற்று உடல் நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் சடலத்தை கொண்டு சென்றனர். அப்போது அங்கு சுடுகாட்டு பாதையை ஆக்கிரமித்த சிலர் அவ்வழியாக செல்ல எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கல்பாக்கம் - திருக்கழுக்குன்றம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: