பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் பெய்த கன மழைக்கு நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டுள்ளதாலும், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். குமாராஜிபேட்டை ஊராட்சி மோட்டூர் செல்லும் சாலையில் மலையடிவாரத்தில் 25 குடும்பங்களை சேர்ந்த இருளர்கள் வசித்து வருகின்றனர். கன மழைக்கு மலைகளிலிருந்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதில் கால்வாய்க்கு அருகில் இருளர்கள் சென்று வர அமைக்கப்பட்டிந்த தார் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சாலை நீர்வரத்து கால்வாயானது.