இஸ்லாமாபாத் : உலகிலேயே மோசமான காற்று மாசுபாடு அடைந்த நகரமாக பாகிஸ்தானின் கலாச்சார நகரம் என அழைக்கப்படும் லாகூர் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்திலேயே எங்கு பார்க்கினையும் அடர்ந்த பனி மூட்டம் போல், தூசு படலம் படர்ந்து காணப்படுகிறது. இதனால் பல ஆயிரம் பேர் நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்விட்சர்லாந்தில் உள்ள காற்றின் தரக் கண்காணிப்பு நிறுவனமான, Platform IQAir, உலகில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களை பட்டியலிட்டுள்ளது. இதில் தான் பாகிஸ்தானின் லாகூர் நகரம் 203 காற்றுத் தர குறியீட்டுடன் முதல் இடத்தில் உள்ளது. 183 தர புள்ளிகளுடன் இந்திய தலைநகர் டேலி 2ம் இடத்தில் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.