திண்டுக்கல்: திண்டுக்கல் - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலைக்காக சாலையின் இருபுறங்களிலும் அமைக்கப்படும் தடுப்புச்சுவரால் விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்திருக்கிறது. திண்டுக்கல்லில் இருந்து பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி வரை 140 கி.மீட்டருக்கு 6 வழிச்சாலை அமைப்பதற்காக 2,000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. தற்போது 4 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், சாலையின் இருபுறங்களிலும் மூன்றரை அடி உயரத்திற்கு தொடர் தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் விவசாய நிலங்கள், நீர்வழிப்பாதைகள் இருப்பதால் தடுப்புச்சுவரால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.