புதுடெல்லி: தனது கணவர் பழனியின் வீரத்துக்காக ஜனாதிபயிடம் இருந்து வீர் சக்ரா விருது பெற்ற பிறகு, அவருடைய மனைவி வானதி தேவி அளித்த பேட்டி: இந்த விருது எனது கணவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகவும், அவருடைய தியாகத்துக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் கருதுகிறேன். தமிழகத்தின் கடைகோடியில் இருந்த ஒருவர், நாட்டுக்காக என்ன செய்தார் என்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனது கணவரால் நானும், எனது குழந்தைகளும் தலைநிமிர்ந்து இருக்கிறோம். ராணுவத்தில் அங்கீகாரம் பெற எனது கணவர் அதிக கஷ்டங்களை அனுபவித்து உள்ளார். அவரை போன்று ராணுவத்தில் சேர சரியான வழிகாட்டுதல் இல்லாதவர்களை ராணுவத்தில் சேர்த்தார். அவருடைய தம்பியும் ராணுவத்தில் உள்ளார்.