சேலம்: சேலம் அருகே வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 2 மூதாட்டிகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் வசித்து வரும் கோபி என்பவரது வீட்டில் இன்று காலை சமையல் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் கோபியின் வீடு உள்ளிட்ட 4 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு மற்றும் காவல்துறையினர், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேர போராட்டத்திற்கு பின் 10 வயது சிறுமி உள்பட 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.