முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலான சேதமடைந்த காலனி வீடுகளை எம்எல்ஏ மாரிமுத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கர்ணகொடை கிராமத்தில் அரசால் கட்டி கொடுக்கப்பட்ட காலனி வீடுகள் 30 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் சேதமடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. இந்நிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து நேரில் சென்று காலனி வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதில் உள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.