பதன்கோட்: பஞ்சாப் மாநிலம், பதன்கோட் மாவட்டத்தில் தீராப்புல் பகுதியில் ராணுவ முகாம் அமைந்துள்ளது. முகாமின் நுழைவு வாயில் அருகே நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கையெறி குண்டை வீசி சென்றனர். இதில் குண்டு வெடித்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயமடையவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து ராணுவ முகாம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பதன்கோட் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், ‘கையெறி குண்டு வீசப்பட்டு இருக்கும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.