எட்டயபுரம்: இந்திய ராணுவத்தில் தரைப்படை, கப்பல்படை, விமானப்படையில் பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 700 வீரர்கள் தூத்துக்குடி ஜவான்ஸ் பசுமை தூய்மை என்னும் அமைப்பை ஏற்படுத்தி சமூக பணியாற்றி வருகின்றனர். விடுமுறையில் ஊருக்கு வரும் வீரர்கள் ஒன்று சேர்ந்து அரசு மருத்துவமனை. பள்ளி, கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களை சுத்தம் செய்து வர்ணம் தீட்டிகொடுத்து வருகின்றனர்.