ஆவடி: நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் போட்டியிட விருப்பம் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு விண்ணப்ப படிவங்களை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி பட்டாபிராமில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கி, திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி மாநகராட்சி, திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர் நகராட்சிகள், திருமழிசை பேரூராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.