கும்பகோணம்: கும்பகோணம் அருகேயுள்ள கொள்ளிட ஆற்றில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஒன்றரை லட்சம் கன அடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் அடுத்த கொள்ளிடம் அணை கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவிடைமருதூர் தொகுதிகளை ஒட்டி ஓடுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக கல்லணை மற்றும் முக்கொம்பு பகுதிகளிலிருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு தினமும் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும், சமீபத்தில் பெய்த கன மழையால் வேகமாக நீர் வடிந்து வருவதால் கல்லணையிலிருந்து ஒரு லட்சம் கனஅடி முதல் ஒன்றரை லட்சம் கன அடி வரை கொள்ளிடத்தில் தற்போது தண்ணீர் செல்கிறது.