ஆலந்தூர்: பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த விஜய் (22), பரங்கிமலையில் வாடகை வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த வீட்டின் அருகில் உள்ள 14 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் விஜய்யை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.