மும்பை: பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே பேடிஎம் பங்கு சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்தனர். பேடிஎம் ஐ.பி.ஓ. அண்மையில் முடிவடைந்ததை அடுத்து பங்குசந்தையில் இன்று பட்டியலிடப்பட்டது. இந்திய கார்ப்ரேட் வரலாற்றிலேயே பேடிஎம் ஐ.பி.ஓ. மிகப்பெரியது என்பதால் முதலீட்டாளர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஐ.பி.ஓ. விலையை காட்டிலும் 9 சதவீத குறைந்த விலைக்கு பங்குசந்தையில் பேடிஎம் பங்குகள் பட்டியலாகின.