ஆந்திர மாநில ஆளுநர் ஸ்ரீ விஸ்வபூஷண் ஹரிசந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி: தமிழிசை நலம் விசாரிப்பு..!

அமராவதி: ஆந்திர மாநில ஆளுநர் ஸ்ரீ விஸ்வபூஷண் ஹரிசந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த மாநில அரசுகளும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் ஆந்திர ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் பாதுகாவலர், உதவியாளர், செவிலியர்,தூய்மை பணியாளர் என அனைவருக்கும்கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, கொரோனா தொற்று உறுதியான ஆந்திர மாநில ஆளுநர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, ஆந்திர மாநில ஆளுநரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

Related Stories: