அதிகனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை : அதிகனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

சென்னை, திருவள்ளூர்,  ராணிப்பேட்டை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, வேலூர், விழுப்புரம், அரியலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்கால், நாகை, திருவாரூர், நாகை, தஞ்சை, கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை?

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி,  ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் 1 முதல் 5 வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: