டெல்லி : மழை வெள்ள பாதிப்பை சீரமைக்க தமிழ்நாட்டிற்கு ரூ. 2,079 கோடி வழங்குமாறு ஒன்றிய அரசிடம் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்திப்பு மேற்கொண்டார். அப்போது தமிழ்நாட்டிற்கு வெள்ள பாதிப்பு நிவாரணமாக உடனடியாக ரூ. 550 கோடியை வழங்குமாறு அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்தார்.
நவம்பர் 8 முதல் நவம்பர் 14ம் தேதி வரை வழக்கத்தை விட 49.6% மழை பெய்துள்ளது என்பதை அமித்ஷாவிடம் குறிப்பிட்ட பாலு, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் 25 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.