புழல்: மாதவரம் தாசில்தார் அலுவலகத்துக்கு பஸ் இயக்கவேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவிடம் மனு கொடுத்தனர். திமுக இளைஞரணி செயலாளரும் சென்னை சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பெருவாயல் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை வந்தார். பின்னர் அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கினார்.