கனடா : கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் திங்களன்று பல்வேறு பகுதிகளில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால், அப்பகுதி முழுவதும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆங்காங்கே எண்ணெய் குழாய்களும் மூடப்பட்டன. அதுமட்டுமின்றி ஒரு நகரமே முழுமையாக வெளியேற்றப்பட்டது. வான்கூவரில் கனமழைக்கு இடையே வீசிய சூறாவளி காற்றால் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு மேல் எழும்பின.