சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பு: விரைவில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளிடமிருந்து வருகிற 21ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளது. விருப்ப மனு கட்டணம் மாநகராட்சி வார்டுகளுக்கு ₹3,000, நகராட்சி வார்டுகளுக்கு ₹2,000, பேரூராட்சி வார்டுகளுக்கு ₹1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருகிற 21ம் தேதி காலை 10.30 மணி அளவில் 21 மாநகராட்சிகளிலும் விருப்ப மனுக்கள் பெறப்படும். சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும், பாஜ மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விருப்ப மனுக்களை நானே பெற்றுக்கொள்ள இருக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.